sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்

/

நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்

நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்

நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்


ADDED : செப் 08, 2011 12:05 AM

Google News

ADDED : செப் 08, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம் பொது மக்களிடம் வரி வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியில் வரி வசூல் பணியினை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், பொது மக்களின் வசதிக்காகவும் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் ஒவ்வொரு கோட்டமாக நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம் வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த வாரம் மாநகராட்சியின் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் நேற்று காலை 9 மணி முதல் ஜெயில் தெரு, கால்நடை மருத்துவமனை அருகில் வரகனேரியில் பொது மக்களிடம் இருந்து வரி வசூல் பணியை மேற்கொண்டது. அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள வசதியை பயன்படுத்தி வரியை செலுத்தினர்.இன்று(8ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை 22வது வார்டுக்கு உட்பட்ட இருதயபுரம் மருத்துவமனை, 23வது வார்டுக்கு உட்பட்ட காஜா பேட்டை வாட்டர் டேங்க் அருகில் 12 மணி முதல் 2 மணி வரை, 24வது வார்டில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை எடத்தெரு காளியம்மன் கோவில் தெரு அருகில் வாகனம் நிறுத்தப்படுகிறது.

நாளை(9ம் தேதி) வெள்ளி காலை 10 மணி முதல் 12 மணி வரை 25 வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி புரம் 4வது தெரு, சின்னகண்ணம்மாள் திருமண மண்டபம், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 26 வது வார்டுக்கு உட்பட்ட முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவில் வரி வசூல் வாகனம் நிறுத்தப்படுகிறது. சனி (10ம் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை 27வது வார்டுக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 33வது வார்டு பகுதியான ஹணிபா காலனி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்த வரியானாலும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us