sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்

/

இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்

இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்

இரு ஆம்னி பஸ்கள் விபத்து: டிரைவர் பலி; 41 பேர் காயம்


ADDED : அக் 27, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: வெவ்வேறு இடங்களில் இரு ஆம்னி பஸ்கள் கவிழ்ந்த விபத்தில், டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்; 41 பயணியர் காயமடைந்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து பெங்களுரூவுக்கு, ஆர்.கே.டி., என்ற தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் டிரைவர் உட்பட, 31 பேர் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் பஸ், திருச்சி மாவட்டம், சிலையாத்தி என்ற இடத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 21 பயணியர் காயமடைந்தனர்.

l காரைக்காலில் இருந்து கோவைக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட கிரிஷ் என்ற ஆம்னி பஸ்சில், 34 பயணியர் இருந்தனர்.

நேற்று அதிகாலை, 2:45 மணியளவில், திருச்சி மாவட்டம், கடியாக்குறிச்சி அருகே பஸ் வந்தபோது, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஐச்சர் வேன் மீது மோதியது. இதில், ஆம்னி பஸ் டிரைவர் துாத்துக்குடி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த கார்த்திக், 33, உயிரிழந்தார்; 20 பயணியர் காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us