sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை

/

தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை

தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை

தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை


ADDED : செப் 05, 2025 01:14 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; கூலித்தொழிலாளி.

கடந்த, 2024ல், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில், ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகு என்பவர் கொலை வழக்கில், சுரேஷ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில், சுரேஷ், தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடியில் சில மாதங்களாக வசித்தார். நேற்று முன்தினம் இரவு, முள்ளிப்பாடி பஸ் ஸ்டாப்பில் நின்ற சுரேஷை, இரு பைக்குகளில் வந்த நால்வர் வெட்டி கொலை செய்து, தலையை தனியாக துண்டித்து எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து, தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், தியாகு கொலைக்கு பழிக்குப்பழியாக, சுரேஷை, ஆலத் துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகுவின் சகோதரர்கள் கல்பேஸ், 35, கவியரசன், 32, பிரவீன், 31, உறவினர்கள் அஸ்வின்குமார், 26, பரமேஸ்வரன், 26, ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. நேற்று ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

சுரேஷ் தலை முள்ளிப்பாடி ஏரி முட்புதரில் மீட்கப்பட்டது. கொலையில் தொடர்புடைய, மேலும் இரண்டு பேரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us