/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்
/
கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்
ADDED : செப் 11, 2024 07:18 AM
வந்தவாசி: வந்தவாசி அருகே, கோவிலுக்கு செல்ல வழி கேட்டு, மொபைல்போன் டவரில் ஏறியும், சாலை மறியலிலும் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கண்டவ-ராட்டி கிராமத்தில், சிவன் கோவில் உள்ளது. இதற்கு அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நடந்து செல்ல மட்டுமே வழி உள்ளது. அப்பகுதி மக்கள், 2 அடி வழி விட்டால், வாகனங்கள் சென்று வர முடியும் எனக்கேட்டும் மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், பஞ்., உறுப்பினர் சரத்துடன் சேர்ந்து, கூத்தம்பட்டி கிராமத்திலுள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசி - திருவண்ணாமலை சாலையிலும் மறியலில் ஈடுபட்-டனர். வந்தவாசி தாசில்தார் பொன்னுசாமி, டி.எஸ்.பி., கங்கா-தரன், மற்றும் தீயணைப்பு துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். மொபைல்போன் டவரில் போராட்டம் நடத்தியவர்களிடமும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். உரிய நட-வடிக்கை எடுப்பதாக கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.

