sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., 'டிஸ்மிஸ்'

/

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., 'டிஸ்மிஸ்'

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., 'டிஸ்மிஸ்'

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., 'டிஸ்மிஸ்'


ADDED : செப் 01, 2024 01:54 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலுாரைச் சேர்ந்த பா.ம.க., பிரமுகர் சின்னபையன், 2015 மே மாதம் கொலை செய்யப்பட்டார்.

விசாரணையில், சின்னப்பையன் கோழிப்பண்ணையிலிருந்து, வேலுார் மாவட்ட கலால் பிரிவு டி.எஸ்.பி., தங்கவேலு, 7 டன் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதும், இவ்விவகாரத்தில் கடத்தல் கும்பல் சின்னப்பையனை கொன்றதும் தெரிந்தது.

இது தொடர்பாக, போளூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கவேலு உதவியுடன், செம்மரக் கட்டைகளை கடத்தியதாக கூறினர்.

மேலும், அவர்கள் தகவலின்படி, வேலுார், அலமேலுமங்காபுரம் நாகேந்திரன், அவர் மனைவி ஜோதிலட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகேந்திரன் வீட்டிலிருந்து, 3.50 டன் செம்மரக்கட்டை, 32 லட்சம் ரூபாய், மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்களும், டி.எஸ்.பி., தங்கவேலு கூறியதன்படி, செம்மரக்கட்டைகளை கடத்தி, பங்கிட்டுக் கொண்டதாக தெரிவிக்கவே, டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஆம்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தங்கவேலுவை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us