sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

செம்மரம் வெட்ட முயன்றதாக பஸ்சில் 10 பேர் மடக்கி பிடிப்பு

/

செம்மரம் வெட்ட முயன்றதாக பஸ்சில் 10 பேர் மடக்கி பிடிப்பு

செம்மரம் வெட்ட முயன்றதாக பஸ்சில் 10 பேர் மடக்கி பிடிப்பு

செம்மரம் வெட்ட முயன்றதாக பஸ்சில் 10 பேர் மடக்கி பிடிப்பு


ADDED : ஜூலை 16, 2025 02:53 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:செம்மரம் வெட்ட, அரசு பஸ்சில் ஆந்திர மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்ததாக, 10 பேரை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், ஒரு கும்பல் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் செல்வதாக, குடியாத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், வேலுாரிலிருந்து, கே.ஜி.எப்., செல்லும் அரசு பஸ்சை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த, 10 பேர், கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன், செம்மரம் வெட்ட ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 10 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us