sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது

/

மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது

மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது

மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது


ADDED : அக் 27, 2024 02:02 AM

Google News

ADDED : அக் 27, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பெரிய ஏரியூரைச் சேர்ந்தவர் மணி, 55; கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா, 50. இவர்களது மகன் ஆட்டோ டிரைவர் லோகநாதன், 29. அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 55. இவரது மனைவி உஷாராணி, 45. இவர்களது மகன்கள் கார்த்தி, 22, வெங்கடேசன், 23, ரஞ்சித்குமார், 27. இவர்கள், அனைவரும் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி, கூலி வேலை செய்கின்றனர்.

ராஜாவின் மகளுக்கும், மணி மகன் லோகநாதனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அன்று முதல், மனைவியை லோகநாதன் அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினமும் மனைவியை தாக்கினார்.

ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது மகன்கள் மூவரும் சேர்ந்து, லோகநாதன் வீட்டிற்கு சென்று, மணி, அவர் மனைவி மல்லிகா மற்றும் லோகநாதனை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

வேப்பங்குப்பம் போலீசார், ராஜா, கார்த்தி, வெங்கடேசன், ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us