sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

 கோர்ட்டில் கூட்டாளியை மிரட்டியவர் மீது உடனே பாய்ந்தது இன்னொரு வழக்கு

/

 கோர்ட்டில் கூட்டாளியை மிரட்டியவர் மீது உடனே பாய்ந்தது இன்னொரு வழக்கு

 கோர்ட்டில் கூட்டாளியை மிரட்டியவர் மீது உடனே பாய்ந்தது இன்னொரு வழக்கு

 கோர்ட்டில் கூட்டாளியை மிரட்டியவர் மீது உடனே பாய்ந்தது இன்னொரு வழக்கு


ADDED : நவ 23, 2025 02:20 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போதே, 'உன்னால் தான் நான் வழக்கில் சிக்கியுள்ளேன்.

'வழக்கு செலவுக்கு பணம் தர வேண்டும்' என, கூட்டாளியை பணம் கேட்டு மிரட்டியவர் மீது உடனே புதிய வழக்கு பாய்ந்தது.

வேலுார் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2015ல் நடந்த ஒரு கொலை தொடர்பாக, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் விசாரணைக்காக, நாமக்கல் மாவட்டம், அகரம்பட்டியை சேர்ந்த பிரம்மகுரு, 36, வேலுார் மாவட்டம், ஒடுகத்துாரை சேர்ந்த விநாயகம், 58, ஆகியோர், நேற்று முன்தினம், வேலுார் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அப்போது, பிரம்மகுரு, 'உன்னால் தான் வழக்கில் சிக்கினேன்; வழக்கு செலவிற்கு பணம் தர வேண்டும்' என, விநாயகத்தை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டுவதாக பிரம்மகுரு மீது, நீதிபதியிடம் விநாயகம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சத்துவாச்சாரி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் வழக்குப்பதிந்து, பிரம்மகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us