sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தாயை சித்ரவதை செய்த 'போதை' மகன் கைது

/

தாயை சித்ரவதை செய்த 'போதை' மகன் கைது

தாயை சித்ரவதை செய்த 'போதை' மகன் கைது

தாயை சித்ரவதை செய்த 'போதை' மகன் கைது


ADDED : மார் 25, 2025 12:50 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடுகத்துார் : வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு, 60. இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் அருண்குமார், 38. திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். அருண்குமாரின் குடிப்பழக்கத்தால், அவரின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்தார்.

தற்போது அலமேலுவுடன் வசிக்கும் அருண்குமார், தினமும் போதையில் அலமேலுவை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை தாயை அடித்து, சேலையால் கழுத்தை நெரித்து, அருகே இருந்த செங்கல்லால் தாக்கினார்.

வலி தாங்க முடியாத அலமேலு, மகனின் இரு கால்களையும் பிடித்து, 'அடிக்காதே, உடம்பு ரொம்ப வலிக்கிறது' என, கதறி அழுதார். இந்த வீடியோ பரவியதால், வேப்பங்குப்பம் போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us