/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போலி ரசீது தயாரித்து மோசடி இ-சேவை மைய ஓனர் கைது
/
போலி ரசீது தயாரித்து மோசடி இ-சேவை மைய ஓனர் கைது
ADDED : பிப் 09, 2025 07:05 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே போலி நிலவரி ரசீது தயாரித்து மோசடி செய்த இ-சேவை மைய உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவில், பல கிராமங்களில் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் நிலவரி வசூலித்து இ-சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர். அதன்படி வெங்கடசமுத்-திரம், சின்னவரிக்கம், பெரியவரிக்கம், கீழ்முருங்கை உள்ளிட்ட பல கிராமங்களில் நிலவரி வசூலித்து, ஆம்பூரை அடுத்த துத்திப்-பட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் பச்சகுப்பத்தை சேர்ந்த தசரதனிடம் வழங்கினர்.
அவரோ, அரசு முத்திரையுடன் கூடிய போலி ரசீதுகளை தயாரித்து வழங்கியுள்ளார். இம்மாத துவக்கத்தில், தாலுகா அலுவலக கணக்கில் சரிபார்த்த போது, பணம் செலுத்தப்படாதது தெரியவந்-தது. இதுகுறித்த புகார் படி, உமராபாத் போலீசார், தசரதனை நேற்று கைது செய்தனர்.

