/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
/
ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : பிப் 01, 2025 07:07 AM
வேலுார்: வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்த இளநிலை உத-வியாளர் லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பாஸ்கர், 62. வேலுார் அடுத்த கீழ் அரசம்-பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி-யாற்றி வந்த சின்னதுரை, 54. இருவரும், வேலுாரில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த, 2012ல் இளநிலை உதவியாளர் பாஸ்கர், தலைமை ஆசி-ரியர் சின்னதுரையிடம், 'உங்கள் மீது எஸ்.பி., அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் ஒரு புகார் வந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 20,000 ரூபாய் பணம் தர வேண்டும்' என கேட்டு மிரட்டினார்.
அதற்கு தனது மகள் திருமண செலவு உள்ளதால் பண நெருக்க-டியாக உள்ளது என சின்னதுரை கூறினார். இதற்கு பாஸ்கர், முதல் கட்டமாக, 15,000 ரூபாயும், பின்னர், 5,000 ரூபாயும் தரு-மாறு கூறினார். இது குறித்து தலைமை ஆசிரியர் சின்னதுரை, வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த, 2012 ஆக., 2ல் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி 201௨ ஆக., 3ல், 15,000 ரூபாயை, சின்னதுரை, பாஸ்கரிடம் கொடுத்தார். மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாஸ்கரை கைது செய்து, வேலுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், நேற்று முன்தினம் மாலை பாஸ்கருக்கு, 3 ஆண்டு சிறை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.