sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை

/

எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை

எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை

எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை


ADDED : நவ 07, 2025 11:49 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: விபத்தில் மாற்றுத்திறனாளியான போலீஸ்காரர், சுடுகாட்டு எரி மேடையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார், பொன்னி நகரை சேர்ந்தவர் வேல்முருகன், 35; வேலுார் தெற்கு காவல் நிலைய போலீஸ்காரர். இவரது மனைவி ஆஷா. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். 2020ல் நடந்த விபத்தில் வேல்முருகன் வலது கால் உடைந்து மாற்றுத்திறனாளியானார். விபத்து ஏற்பட்ட காலில் அவருக்கு தினமும் வலி ஏற்பட்டது. இரவில் துாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து தன் மூன்று சக்கர பைக்கில் வசந்தபுரம் சுடுகாட்டு எரிமேடைக்கு சென்றார்.

அங்கு, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுதும் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை அவ்வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் வேல்முருகன் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us