/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாமனாரை வெட்டிய மருமகனுக்கு 'காப்பு'
/
மாமனாரை வெட்டிய மருமகனுக்கு 'காப்பு'
ADDED : மே 19, 2025 02:34 AM
வேலுார்: வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்த வண்டரந்தாங்கலை சேர்ந்தவர் ராஜூ, 48; இவரது மகள் அர்ச்சனா, 20; இவரின் கணவர் ராஜ்குமார், 27; பெற்றோர் வீட்டின் முதல் மாடியில் கண-வருடன் வசிக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் அர்ச்சனாவின் தாயார் இறந்து விட்டார். இதனால் கணவனை இழந்த பெண்ணை, ராஜூ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது அர்ச்சனாவுக்கு பிடிக்கா-ததால், தந்தை-மகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நி-லையில் தாய்க்கு சொந்தமான சொத்தை, தனக்கு பிரித்து தருமாறு தந்தையிடம் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் அர்ச்சனா நேற்று தரை தளத்தில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது வந்த ராஜூ சறுக்கி விழுந்தார். இதனால் மகளை திட்ட, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா கட்டையாலும், மருமகன் ராஜ்குமார் கத்தி-யாலும் தலையில் வெட்டியதில், ராஜூ படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காட்பாடி போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்.