/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவிகள் ரீல்ஸ் வீடியோ விவகாரம்; காங்கேய நல்லுார் ஆசிரியை சஸ்பெண்ட்
/
மாணவிகள் ரீல்ஸ் வீடியோ விவகாரம்; காங்கேய நல்லுார் ஆசிரியை சஸ்பெண்ட்
மாணவிகள் ரீல்ஸ் வீடியோ விவகாரம்; காங்கேய நல்லுார் ஆசிரியை சஸ்பெண்ட்
மாணவிகள் ரீல்ஸ் வீடியோ விவகாரம்; காங்கேய நல்லுார் ஆசிரியை சஸ்பெண்ட்
UPDATED : செப் 21, 2024 05:54 AM
ADDED : செப் 21, 2024 02:35 AM

வேலுார்:வேலுார் அருகே அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விவகாரத்தில், அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வேலுார் காங்கேய நல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், படிக்கும் மாணவியர் சிலர் இன்ஸ்டா கிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கத்திற்கு ஆளான மாணவியர் பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.
இந்த விழாவிற்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவியர் தெரியாமல் செய்துவிட்டோம் என கூறினர்.
தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதன்மை கல்விஅலுவலர் மணிமொழியிடம் சமர்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக பள்ளி மாணவியரின் வகுப்பு ஆசிரியை சாமூண்டீஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.