/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவி கர்ப்பம் வாலிபருக்கு 'காப்பு'
/
மாணவி கர்ப்பம் வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 16, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டியை சேர்ந்தவர் தொழிலாளி செந்தமிழ், 26. இவருக்கும், வேலுாரை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, செந்தமிழ் பலாத்காரம் செய்ததில், மாணவி கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் விசாரித்ததில், கர்ப்பத்திற்கு காரணம் செந்தமிழ் என மாணவி கூறினார்.
பெற்றோர் புகார் படி, வேலுார் மகளிர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, செந்தமிழை போக்சோவில் கைது செய்தனர்.