sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்

/

பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்

பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்


ADDED : செப் 24, 2025 03:15 AM

Google News

ADDED : செப் 24, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:அரக்கோணம் அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தண்டலம், பாலாஜி நகரை சேர்ந்தவர் வினோத், 30. இவரது மனைவி நிவேதா, 26; இருவரும் ஐ.டி., ஊழியர்கள். தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பதி இருவரும் லண்டனில் வசித்தனர். பின், சொந்த ஊரான தண்டலம் கிராமத்திற்கு வந்தனர். இந்நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

நிவேதா, சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தன் பெரியப்பா வீட்டிற்கு கடந்த ஆண்டு சென்றார். பின்னர் கணவர் வீட்டு தரப்பினர் பேச்சு நடத்தி, நிவேதாவை கடந்த மாதம் தண்டலம் அழைத்து வந்தனர்.

மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிவேதா நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அரக்கோணம் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நிவேதாவை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தி, நிவேதா இறப்பு குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடப்பதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us