sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

/

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்


ADDED : ஜன 30, 2024 03:27 PM

Google News

ADDED : ஜன 30, 2024 03:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அணைக்கட்டு : வேலுார் அருகே, பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கோவிந்ரெட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி. இவருடன், 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தலைமை ஆசிரியை ரேவதியின் டார்ச்சரால், ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பில் செல்வதோடு, அப் பள்ளியில் இருந்து மாறுதல் வாங்கியும் செல்கின்றனர். இதனால், அப்பள்ளியில், படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிப்பதை அறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியையை மாற்ற வலியுறுத்தி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, 26 ல் நடந்த கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினர். அப்போதும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று பஞ்., தலைவி கவிதா தலைமையில், பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.






      Dinamalar
      Follow us