sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது

/

'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது

'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது

'ஓசி சரக்கு' கேட்டதால் வி.சி., நிர்வாகி கொலை; 2 பேர் கைது


ADDED : மே 03, 2025 12:17 AM

Google News

ADDED : மே 03, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் அடுத்த அரியூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சரத்குமார், 34; வி.சி., தொழிலாளர் முன்னணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். ஏப்., 28ம் தேதி இரவு சரத்குமார் தலை, முகம், கால்கள் மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். பாகாயம் போலீசார் விசாரித்தனர்.

சரத்குமாரை கொலை செய்தது, அரியூரைச் சேர்ந்த டேவிட்ராஜ், 30, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சிவா, 50, என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'அரியூர் டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்கச் சென்ற சரத்குமார், டேவிட்ராஜிடம் பணம் கேட்டுள்ளார். ஓசியில் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

'டேவிட்ராஜ் மறுத்ததால், அவரை சரத்குமார் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த டேவிட்ராஜ் தன் நண்பர் சிவாவுடன் சேர்ந்து சரத்குமாரை கற்கள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்துள்ளார். அவர்களை கைது செய்துள்ளோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us