sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு

/

விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு


ADDED : ஜூலை 15, 2011 12:59 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையம் அருகே, 'தளபதி திடல்' என்ற பெயரில், அரசுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்ததால் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பூந்தோட்டம் ஏரியில் இயங்கி வருகிறது. இதனைச் சுற்றியுள்ள நீர் வரத்து வாய்க்கால் பகுதிகள், ஆக்கிரமிப்பில் சிக்கி மறைந்துள்ளன. இதனால், பஸ் நிலையத்தில் கழிவுநீர், மழைநீர் வெளியேற வழியின்றி, இன்றளவும் பிரச்னை தொடர்கிறது. ஆக்கிரமிப்பு குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்தும் சீரமைக்கப்படவில்லை.

பஸ் நிலையத்தின் இடது புறத்தில், வாய்க்கால் வரத்து சென்ற ஏரிப்பகுதியையொட்டிய காலியிடம், கடந்த தி.மு.க., ஆட்சியில் பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்டு, 'தளபதி திடல்' என பெயரிட்டு, அங்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.



இதன் பின், அரசு மற்றும் தனியார் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது, தனியாருக்குச் சொந்தமான பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு, ஏரி புறம்போக்கு பகுதியை சேர்த்து ஆக்கிரமித்துள்ளவர்கள், 'தளபதி திடல்' என்ற பெயரில், தனியார் கண்காட்சி போன்றவற்றிற்கு அனுமதித்து, கட்டணமும் வசூலிக்கின்றனர். வருவாய்த் துறையிலும் இந்த இடத்திற்கு அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த இடம், அரசுக்குச் சொந்தமானதா, தனியாருடையதா என்ற சர்ச்சை எழுந்து கலெக்டருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையப் பகுதிகளை, திடீர் ஆய்வு செய்த கலெக்டர் மணிமேகலை, டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் ஆகியோர், பஸ் நிலையத்திலிருந்து கழிவு நீர், மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது, அருகே ஏரி புறம்போக்கு பகுதியிலிருந்த திடலில் பொருட்காட்சி அரங்கு வைத்திருந்த இடத்தை, கலெக்டர் மணிமேகலை பார்வையிட்டார். இந்த இடம் அரசுக்குச் சொந்தமானதா, தனியாருடையதா என விளக்கம் கேட்டார்.



இதற்கு பதிலளித்த வருவாய்த் துறையினர், இது, அரசுக்குச் சொந்தமான இடம்தான், ஆனால் தனியாரிடம் உள்ளது என, மழுப்பினர். ஏரிப்பகுதி இடம் தனியாருக்கு எப்படி போனது. இந்த இடத்தை பராமரிப்பது யார். பொருட்காட்சி நடத்த யார் அனுமதி கொடுத்தது என கேட்டபோது, அதிகாரிகள் விழித்தனர். இந்த இடத்தின் முழு விவரங்களையும், உடனே தெரியப்படுத்த வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வெளியேற வழி செய்ய வேண்டுமென, அதிகாரிகளிடம் கலெக் டர் உத்தரவிட்டார்.










      Dinamalar
      Follow us