/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாமியாடி குச்சிப்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்
/
சாமியாடி குச்சிப்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2011 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த சாமியாடி குச்சிப்பாளையத்தில் உள்ள தும்பிக்கை யாழ்வார், வீரராகவ பெருமாள், உமையாள் நாச்சியார், கனகவல்லி சமேத , கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று(14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு பூர்ணாருதி, தீபாராதணையும், 7 மணிக்கு கலசம் புறப்படுதல் நடக்கிறது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது.

