ADDED : ஆக 16, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:00 மணிக்கு சோதனை நடத்தினர்.
அப்போது, ஜானகிபுரம் காய்கறி மார்க்கெட் அருகே கஞ்சா விற்ற விழுப்புரம் கொய்யத்தோப்பு பாத்திமா நகரைச் சேர்ந்த முத்துராமன் மகன் கார்த்திக், 33; பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 30; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 220 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

