sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுார் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.68 லட்சம் பறிமுதல்

/

வானுார் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.68 லட்சம் பறிமுதல்

வானுார் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.68 லட்சம் பறிமுதல்

வானுார் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.68 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 01, 2024 05:19 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர், : வானூர் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 2.68 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தலையொட்டி, பறக்கும் படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகின்றது. இதே போல், வானூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தலம்பட்டு அரசுப்பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு புள்ளியியல் துறை ஆய்வாளர் தயாநிதி தலைமையில் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த டிஎன்14.ஆர்.0940 என்ற பதிவெண் கொண்ட காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் ரூ. 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரிடம் விசாரித்தனர். அதில், கேட்ரிங் சர்வீஸ் நடத்தி வருவதாகவும், அதற்காக பணம் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உரிய ஆவணமில்லாததால், அவரிடம் இருந்த பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருககேசனிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us