sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது

/

மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தல் பெண் உட்பட 3 பேர் கைது


ADDED : மார் 12, 2025 07:39 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார், நேற்று மதுரபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில், அவர்கள் 318 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 66; சித்தலம்பட்டு சக்திவேல் மகன் சரண், 20; என தெரிந்தது. உடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதேபோன்று, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், மதுவிலக்கு போலீசார் சோதனையின் போது, பஸ்சில் புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் தமிழ்வேலன் மனைவி பூங்கொடி, 40; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 108 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us