/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
/
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
ADDED : ஆக 20, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார், நேற்று மாம்பழப்பட்டு சாலையில் வாகன தணிக்கை செய்தனர்.
அவ்வழியே மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்திய கல்பட்டு தேவேந்திரன்,47; தணிகாசலம்,55; சின்னப்பராஜ்,35; மாரிமுத்து,48; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்ததோடு 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.