/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பண்ணையில் மழைநீர் புகுந்து 4800 கோழிகள் இறந்தன
/
பண்ணையில் மழைநீர் புகுந்து 4800 கோழிகள் இறந்தன
ADDED : ஆக 13, 2024 06:09 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அடுத்த கெடாரில் பலத்த மழை காரணமாக கோழிப் பண்ணையில் மழை நீர் புகுந்ததால் 4,800 கோழிகள் இறந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
கடந்த 10ம் தேதி இரவு விழுப்புரம் அடுத்த கெடாரில் கனமழை பெய்ததில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், கெடார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பழனியம்மாள், 39; என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் மழை நீர் புகுந்தது.
இதில் பண்ணையில் இருந்த 4,800 கோழிகள் நீரில் மூழ்கியும், சேற்றில் சிக்கியும் இறந்தன.
தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள், கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

