sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை

/

காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை

காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை

காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை


ADDED : ஆக 03, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சந்திரலேகா, 45; மினி சரக்கு வேனில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர், வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டை பூட்டி கொண்டு, விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்கச் சென்றார்.

மீண்டும் 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், கைரேகை பிரிவினர் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us