/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
/
கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
ADDED : மே 24, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த நங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 56; இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், ஒலக்கூரிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சென்னை மெயின்ரோட்டில் உள்ள கோனேரிக்குப்பம் கூட்ரோட்டைக் கடக்க முயன்ற போது, பின்னால் திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், சின்னதுரை ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த சின்னதுரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

