நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேடு ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 53; கூலித் தொழிலாளி. இவரது மகன் நாகராஜன், 22; இவர், பிறந்தது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 22ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.