sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு

/

சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு

சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு

சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு


ADDED : செப் 09, 2024 05:58 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வி.புதுப்பாக்கம் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள சணப்பை பசுந்தாள் உரப்பயிரை, வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.

முதல்வரின் 'மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் மண் வளத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடப்பாண்டில் வானுார் தாலுகாவிற்கு 9,450 கிலோ சணப்பை பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு முன்பாக சணப்பை விதைகளை விதைப்பு செய்துள்ள விவசாயிகள் 45 நாட்கள் ஆகும்போது பசுந்தாள் உர பயிரினை மண்ணில் மடக்கி உழவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று செய்வதால், மண்ணில் உள்ள உயிர் கரிமச்சத்துக்களை அதிகரித்து, அடுத்து வரும் பயிருக்கு அதிக மகசூல் கிடைக்கும்.

வி.புதுப்பாக்கம் கிராமத்தில் விவசாயி கணேசன், தனது விவசாய நிலத்தில் சணப்பை பசுந்தாள் உர பயிரை சாகுபடி செய்துள்ளார்.

இந்த உர பயிரை வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரசேகர், கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us