sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி 

/

செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி 

செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி 

செம்மண் குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி பல்டி 


ADDED : ஏப் 17, 2024 07:58 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், நேற்று மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பிறழ் சாட்சி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், பூத்துறை செம்மண் குவாரியில், விதிமீறி செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் உள்ள 67 அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரை 22 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் 23வது சாட்சியாக ஆஜரான, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சம்பத், அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு அலுவலக அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில், கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 23 பேரில் 19 பேர் பிறழ் சாட்சி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us