sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை இணை சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு 

/

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை இணை சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு 

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை இணை சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு 

விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை இணை சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு 


ADDED : ஜூலை 27, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், இணை சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் திரு.வி.க., சாலை, இணை சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு, லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று முன்தினம் இரவு, அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இணை சார்பதிவாளர் (பொ) பூங்காவனம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் சோதனை நடத்தினர்.

இரவு 11.45 மணியளவில் சோதனை முடிந்தது. அப்போது, ஆவணங்களுக்குள் இருந்த பணம், பீரோவில் இருந்த பணம் மற்றும் லஞ்சம் கொடுப்பதற்காக பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் வைத்திருந்த பணம் என்று, கணக்கில் வராத ரூ.42 ஆயிரத்து 600 தொகையை கண்டுபிடித்து, விசாரணை நடத்தினர்.

மேலும், சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் மட்டும் பத்திரப்பதிவுக்காக 40 பேர் விண்ணப்பித்திருந்ததும், அவர்களில் 18 பேருக்கு, பத்திரப்பதிவு நடந்துள்ளதும், அவர்களிடம் கட்டணத்தை விட, ரூ.42 ஆயிரம் லஞ்சமாக வசூலித்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்த இணை சார் பதிவாளரான (பொ) பூங்காவனம், கேமரா ஆப்ரேட்டரான பரணி, உதவியாளர் திருமால் மற்றும் முருகன், பெருமாள், வளவனூரைச் சேர்ந்த குருநாதன் ஆகிய 6 பேர் மீதும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் சிக்கிய அதிகாரிகள்...இதே இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மே 21ம் தேதி இரவு நடந்த சோதனையின்போது, ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, அப்போது பணியில் இருந்த இணைசார் பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

ேலும், இணை சார் பதிவாளர் வீட்டில் சோதனை நடத்தி, ரூ.1.26 கோடி மதிப்பிலான வைப்பு தொகை உள்ளிட்ட பல ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் புகார் எழுந்து, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி, லஞ்ச பணத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us