sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாமதத்தால் பதற்றம்

/

தாமதத்தால் பதற்றம்

தாமதத்தால் பதற்றம்

தாமதத்தால் பதற்றம்


ADDED : ஏப் 29, 2024 05:29 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில், 'தினமலர்' நாளிதழ் மாதிரி நீட் தேர்வு, நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, காலை 9:30 மணிக்கே தேர்வு அறைக்கு மாணவர்கள் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடைபிடித்து சரியாக வந்தனர். காலை 8:30 மணிக்கே வெளியூர் மாணவர்கள் சிலர் வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் பலர், சீருடையுடன் வந்திருந்தனர்.

வழக்கமான பரிசோதனைக்கு பிறகு, காலை 9:30 மணிக்கு ஹால் டிக்கெட் வழங்கி தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவர்கள், கடைசி நேரத்தில் 9:45 மணிக்கு அவசர, அவசரமாக ஓடிவந்து தேர்வில் பங்கேற்றனர்.

'நீட்' தேர்வில், தாமதத்தால் ஏற்படும் பதட்டத்தைத் தவிர்க்கவும், நீட் தேர்வின் நேரம், முன் கூட்டியே வர வேண்டிய அவசியத்தையும், மாணவர்கள் நன்கு உணர்ந்து, தேர்வுக்கு முன் கூட்டியே வந்துவிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us