/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வட்டார வள பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
வட்டார வள பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
வட்டார வள பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
வட்டார வள பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 05, 2025 05:27 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் வட்டார வள மைய பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிற்கு, 11 கூடுதல் வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பெண் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வலுவான தகவல் தொடர்பு திறன் மற்றும் தனிப்பட்ட திறன்களுடன் இருக்க வேண்டும்.
கணினியில் விருப்பத்தக்க அறிவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 2025 மார்ச் 1ம் தேதி 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சி தினங்களில் மட்டும் ஊதியமாக நாள் ஒன்றுக்கு பயணப்படியுடன் சேர்த்து 750 ரூபாய் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டடம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் (மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரில்), விழுப்புரம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்.