/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 06, 2024 05:26 AM
விழுப்புரம் : ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அம்பேத்கர் சட்ட பல்கலையோடு இணைவு பெற்ற விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரி உட்பட பல்வேறு சட்ட கல்லுாரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பம் வழங்குவது வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது.
அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் சட்ட படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.