/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது
/
குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது
ADDED : மே 10, 2024 01:01 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த நண்பரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ராஜகோபால் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடே சன், 62; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனது நண்பரான, விழுப்புரம் பூந்தோட்டம் பாதையைச் சேர்ந்த பாலாஜி, 41; என்பவருடன், பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, பாலாஜி குடிப்பதற்கு பணம் தருமாறு, வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த பாலாஜி, பேனா கத்தியால் வெங்கடேசனை குத்தினார். வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று பாலாஜியை கைது செய்தனர்.