ADDED : செப் 10, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் புதிய ஏ.எஸ்.பி., யாக ரவீந்திர குமார் குப்தா பொறுப்பேற்றார்.
விழுப்புரம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஐ.பி.எஸ்., அதிகாரி ரவீந்திரகுமார் குப்தா நியமனம் செய்யப்பட்டார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷா மிட்டல், எஸ்.பி., தீபக் சிவாச், ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.