sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

/

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்


ADDED : ஆக 29, 2024 07:57 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மயிலம் அடுத்த முப்புளி ஊராட்சி தலைவர் சந்திரசேகர், 50. ஊரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஊராட்சி தலைவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பார்வையிட்டார்.

அப்பொழுது முன் விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ், 23; முருகன் மகன் விமல், 20, ஆகியோர் ஊராட்சி தலைவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சந்திரசேகர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், ஊராட்சி தலைவர் சந்திரசேகர், மயிலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டப்பு சார்பில், ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே சதீஷ் மற்றும் விமல் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us