/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை
/
காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை
ADDED : ஆக 29, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகே, காதலித்த பெண் இறந்த துக்கம் தாங்காமல் காதலன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் அடுத்த பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் சஞ்சீவி, 23; இவர், ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்து இறந்தார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சஞ்சீவி நேற்று இரவு தனது வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.