ADDED : செப் 09, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மோதி ஒருவர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த கீழ்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு, 54; இவர் நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டவர், பைக்கில் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் வீடு திரும்பினார்.
இரவு 11:45 மணியளவில், திண்டிவனம் நோக்கி வந்த மற்றொரு பைக், சுப்பராயலு ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.