/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் நகை, பணம் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் நகை, பணம் திருட்டு
ADDED : செப் 11, 2024 11:13 PM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கன், 63; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரும் இவரது மனைவி கமலா என்பவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர்.
அதிகாலை 2:00 மணியளவில் திடீரென பீரோவை உடைப்பது போல் சத்தம்கேட்டுள்ளது அதிர்ச்சியடைந்த நரசிங்கன் எழுந்து லைட் போட்டுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் இருந்து அடையாளம் தெரியாத நபர் நரசிங்கனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. இதையெடுத்து அக்கம்பக்கதினர் உதவியுடன் தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள விவசாய நிலத்தில் இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.