sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

/

ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

ரூ.1 கோடி பணத்துடன் கார் பறிமுதல்; விழுப்புரம் அருகே போலீசார் அதிரடி

1


ADDED : ஜூன் 29, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 06:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனைச் சாவடியில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.

மாலை 4:00 மணி அளவில் விழுப்புரம் நோக்கி வந்த டிஎன்.10-பியூ.8118 பதிவெண் கொண்ட டொயட்டோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 ட்ராலி பேக்குகளில் கட்டு கட்டாக ரூ.1 கோடி பணம் அடுக்கி வைத்திருந்தது.

இதுகுறித்த காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் மதனகோபால், 48; கோவையில் அவரது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடத்தை ரூ.1.10 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தை எடுத்து வருவதாக கூறி, அதற்கான ஆவணங்களை காட்டினார்.

இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காரில் இருந்த பணத்தை கைப்பற்றி, விழுப்புரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இப்பணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us