/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு
/
மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு
ADDED : மார் 06, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று மரகதபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள, தென்பெண்ணை ஆற்றில், அதே பகுதியை சேர்ந்த முருகன், 40; என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.