/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாரஸ் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
/
டாரஸ் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஆக 06, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அருகே பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் இறந்தார்.
மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் சக்தி சண்முகம், 19; மயிலத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லுாரியில் கட்டணத்தை செலுத்தி விட்டு பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
மதியம் 12:45 மணியளவில் மயிலம் - செண்டூர் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி பைக் மீது மீது மோதியது. இதில் சக்தி சண்முகம் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.