sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்

/

கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்

கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்

கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்


ADDED : பிப் 15, 2025 04:40 AM

Google News

ADDED : பிப் 15, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் காதலர் தினம் கொண்டாடியபோது ஏற்பட்ட தகராறில், அரசு கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நகர்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 3,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

காதலர் தினத்தையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே வழக்கத்தை விட மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இங்கிருந்த சில மாணவர்கள், திடீரென நடுரோட்டிலே ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அவர்களை அங்கிருந்த சக மாணவர்கள் விலக்கி விட்டனர். இது சம்பந்தமாக, மாணவர்கள் தரப்பில் கேட்ட போது, காதலர் தினத்தை கொண்டாடிய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் மோதலாக மாறியதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us