sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி

/

விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி

விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி

விழுப்புரம் (தனி) தொகுதியில் பரிசீலனை: 31ல் 18 மனுக்கள் ஏற்பு; 13 தள்ளுபடி


ADDED : மார் 29, 2024 04:52 AM

Google News

ADDED : மார் 29, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் நேற்று நடந்த மனுக்கள் பரிசீலனையில் 31 மனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் 27ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நடந்த பரிசீலனையில், தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ்குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் பங்கேற்றனர்.

தேர்தலில் போட்டியிட 31 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 13 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் விபரம்:

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் பகுஜன் சமாஜ் கட்சி - கலியமூர்த்தி, அ.தி.மு.க., பாக்கியராஜ், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி - ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி - களஞ்சியம், பா.ம.க., - முரளி சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி - ரவிக்குமார் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

அதே போல், சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்திருந்த 12 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

இதில், கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 6 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 12 பேர் என 18 மனுக்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை 30ம் தேதி மாலை 3:00 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுகொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் தங்களின் மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துஉள்ளார்.

பா.ம.க.,வினர் கேள்வியால் பரபரப்பு

மனுக்கள் பரிசீலனையின் போது, பா.ம.க.,வினர் குறுக்கிட்டு, தற்போது வி.சி., கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ரவிக்குமார், கடந்த முறை நடந்த தேர்தலில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். இதனால், அவர் தி.மு.க., எம்.பி., என்ற நிலையில், தற்போது வி.சி., கட்சி சார்பில் எப்படி போட்டியிடுகிறார் என கேள்வியை எழுப்பினர். இதற்கு அதிகாரிகள், ரவிக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்தனர்.அதில், அவர் வி.சி., கட்சி உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை இணைக்காததால் அவரின் வேட்பு மனுவை பரிசீலனை செய்யாமல் நிறுத்தி வைத்தனர். பின், வி.சி., கட்சியினர் குறுக்கிட்டு, ரவிக்குமார் வி.சி., கட்சி உறுப்பினராகத்தான் உள்ளார் என அக்கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகளிடம் கூறியதோடு, உறுப்பினர் அட்டையை சமர்பித்தனர். இதையடுத்து ரவிக்குமாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.








      Dinamalar
      Follow us