/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு
/
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேரின் காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 10, 2024 05:12 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் 15 பேரின் நீதிமன்ற காவல் வரும் 23ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65 பேர் இறந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சிவக்குமார், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி, பன்ஷிலால், கவுதம்சந்த், சக்திவேல் ஆகிய 15 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று 15 பேரையும் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், 15 பேரின் நீதிமன்ற காவலை வரும் 23ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.