/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
/
கல்லுாரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
ADDED : அக் 18, 2024 11:35 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆர்.ஜி., நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு, சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள். பெருகிவரும் இணையவழி குற்றங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகள், கவனமாக இருக்க வேண்டிய வழிமுறைகள்.
ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள், போலி அப்களில் பெரும் கடன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
தொடர்ந்து, '1930' உதவி எண், 'cybercrime.gov.in' குறித்து விளக்கமளித்து மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கி, குற்றங்கள் தொடர்பான அறிவுரைகளை வழங்கினர்.

