ADDED : மே 06, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் திவ்யா, 21; வீட்டிலிருந்த இவரை, கடந்த 29ம் தேதியிலிருந்து திடீரென காணவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
திவ்யாவின் தாய் சுதா, தனது மகள் காணாமல் போன சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்,23; என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.