ADDED : மே 12, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் மோனிஷா என்கிற சத்யபாமா, 20; இவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டியூட்டில் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து கல்லுாரிக்குச் சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பவானி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.