sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்து நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி

/

விபத்து நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி

விபத்து நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி

விபத்து நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி


ADDED : ஏப் 13, 2024 04:47 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

உளுந்துார்பேட்டை அருகே சேந்தநாடு பழைய காலனியை சேர்ந்தவர் சக்திவேல்,40; கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018 ம் ஆண்டு ஏப்., 27 ம் தேதி உளுந்துார்பேட்டை சாலையில் மொபட்டில் சென்றார்.

அப்போது எதிரே திருச்சியிலிருந்து உளுந்துார்பேட்டை நோக்கி வந்த கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ், மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில், சக்திவேலின் வலதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தார். விபத்து தொடர்பாக நஷ்டஈடு வழங்கக் கோரி சக்திவேல், விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சக்திவேலுக்கு நஷ்டஈடாக ரூ.1,30,000 வழங்கும்படி உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் சக்திவேல் சார்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபாதாமஸ், மனுதாரர் சக்திவேலுக்கு சம்பந்தபட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடாக வட்டியோடு சேர்த்து ரூ.1,89,200 வழங்க வேண்டுமென்றும், குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என கடந்த மார்ச் 25ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ், நேற்று காலை 11.30 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த போது அந்த பஸ்சை, நீதிமன்ற உத்தரவின் பேரில், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் தமிழ்வேந்தன் ஜப்தி செய்தார். பின், அந்த பஸ் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us